Friday, January 15, 2010

உப்பு கறி

    எங்கள் ஊர்ப்பக்கம் மதுரையில் இந்த உப்புக்கறி மிகப்பிரபலம்.  எந்த மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படாமல் செய்யப்படும் ஓரு அருமையான கிராமத்து சமையல். 
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கறி ¼ கிலோ
சின்ன வெங்காயம் 100 கிராம்
பச்சை மிளகாய் 5
வெள்ளை உருட்டு உளுந்து 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை 1 கொத்து
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் 3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி ¼ டீஸ்பூன்

செய்முறை:
  • ஆட்டுக்கறியை நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கி, மஞ்சள் பொடி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும் (குக்கரில் 1 விசில் + சிம்மில் 15 நிமிடம்)
  • வானலியில் எண்ணெய் ஊற்றி, உளுந்து, சோம்பு, கருவேப்பிலை, சின்ன வெங்காயம்(பொடியாக நறுக்கியது), கீறிய பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வதங்கியவுடன் வேகவைத்த கறியைச் சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும்.  
  • இதற்கு உப்பு கொஞ்சம் தூக்கலாக போட வேண்டும்.

4 comments:

  1. ம்ம் நாக்குல எச்சில் ஊறுது....

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி @அண்ணாமலையான் அவர்களே.

    ReplyDelete
  3. நல்லாதான் இருக்கு, ஆனா எனக்கு சாப்பிடும் பழக்கம் இல்லையே. நன்றி.

    ReplyDelete

Related Posts with Thumbnails