Tuesday, December 29, 2009

துரித இட்லி


வீட்டில் சாதம் மிஞ்சிவிட்டால் அதை வீணாக்காமல் சுவையான இட்லியாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

சாதம் 1 கப்
ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 1
இஞ்சி 1 துண்டு
மிளகு பொடி ½  டீஸ்பூன்
சீரகப்பொடி  ½  டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
கேரட் 1
தேங்காய் துருவல் சிறிதளவு
பச்சை பட்டாணி ¼ கப்
மல்லித்தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:


·        சாதம் அளவுக்கு ரவை எடுத்துக் கலந்து கொள்ளவும.
·        அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், இஞ்சி, மிளகு பொடி, சீரகப்பொடி, கேரட், தேங்காய் துருவல், பச்சை பட்டாணி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக இட்லிமாவு பதத்தில், அழுத்திப் பிசைநது அரை மணி நேரம் ஊற வைக்கவும.
·        பிறகு எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் இந்தக் கலவையை இட்லியாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
·        இந்த துரித இட்லு ரொம்ப மிருதுவாக இருக்கும்

  • சைடு டிஷ் இல்லாமலேயே ரொம்ப சுவையா இருக்கும்.




Monday, December 21, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாகு





மைக்ரோவேவில் சமைப்பதால் உணவில் சத்துக்கள் விரையமாவதில்லை. வெகு சீக்கிரமாக சமைத்து விடலாம். சரி ரெசிப்பியைப் பார்க்கலாம்.
  
தேவையானவை:

கடலை மாவு 1 கப்
சர்க்கரை 2 கப்
நெய் 1 கப்
பால் 2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் 1 சிட்டிகை


செய்முறை:

·        மைக்ரோவேவ் பாத்திரத்தில் பாலைத் தவிர எல்லாவற்றையும் போட்டு, மைக்ரோ ஹையில் 6 நிமிடம் செட் செய்து, ஸ்டார்ட் செய்யவும்.
·        2½  நிமிடங்கள் ஆனபிறகு, பாஸ் பட்டனைத் தட்டி, பாத்திரத்தை வெளியே எடுத்து, பாலை ஊற்றி, ஒரு கிளறு கிளறி, மறுபடியும் உள்ளே வைத்து, மைக்ரோவேவை ஸ்டார்ட் செய்யவும்.
·        அடுத்த 3½ நிமிடம் கழித்து, மீண்டும் வெளியே எடுத்து ஒரு கிளறு கிளறி உடனே நெய் தடவியத் தட்டில் கொட்டிப் பரப்பவும்.
·        சிறிது ஆறியதும் துண்டு போடவும்
·        6 நிமிடத்தில் மைசூர் பாகு ரெடி.
·        இதற்கு நெய் மிகவும் குறைவாகவே செலவாகும்.


டிப்ஸ்: மைக்ரோவேவ் ஓவனில் உள்ள சுழலும் தட்டின் ஓரங்களில் பாத்திரத்தை வைத்துச் சமைத்தால் சீக்கிரம் உணவு சமைக்கப்படும். 

Thursday, December 17, 2009

கேப்பை ரொட்டி




இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு இன்றியமையாததாகும். இந்த வகையில் கேப்பை ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும். இது இதய நோய்யுள்ளவர்கள், சக்கரை நோய்யுள்ளவர்கள், உடல் குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் சிறந்ததாகும்.
   இந்தப் பதிவில் கேப்பை மாவைக் கொண்டு செய்யப்படும் ஒரு ரொட்டி வகையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
கேப்பை மாவு 2 கப்
பெரிய வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
கேரட் 1
தேங்காய் 1
கொத்தமல்லிகருவேப்பிலை- 1 கைப்பிடியளவு
எண்ணெய் 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை:
  • முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காய் மற்றும் கேரட்டை பொடியாக துருவிக் கொள்ளவும்.
  • கேப்பை மாவுடன் உப்பு கலந்து நறுக்கிய மற்றும் துருவிய பொருட்களைச் கலந்து கொள்ளவும்.
  • இந்தக் கலவையில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 15 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  • பின்பு சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.
  • இது காலை உணவிற்கு உகந்ததாகும்.    
  • இதனை தொட்டுக்கொள்ள எதுவுமில்லாமல் அப்படியே சாப்பிடலாம். 






Monday, December 14, 2009

சன்னா கோஃப்தா







தேவையான பொருட்கள்:

சன்னா(வெள்ளை சுண்டல்)- ¼ கிலோ
கொத்தமல்லி இலை- ¼ கப்
பச்சை மிளகாய் – 1
தேங்காய் – 1 சில்லு
தலியா(கோதுமை ரவை) - ¼ கப்  (1 மணி நேரம் ஊரவைத்து)
உப்பு      - தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரித்தெடுக்க


செய்முறை:
  • முதலில் சன்னாவை 10 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை சன்னாவை வேகவைத்து இறக்கவும்.
  • வெந்த சுண்டல்கொத்தமல்லி இலைபச்சை மிளகாய்தேங்காய்ஊறவைத்த தலியா மற்றும் உப்பு சேர்த்து பருப்பு வடை பதத்தில் அரைத்தெடுங்கள்.
  • பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து(புகையக்கூடாது)அரைத்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக போட்டு மிதமான தீயில் பொரித்தெடுங்கள்.
  • சன்னா கோஃப்தா தயார்.
  • இந்த கோஃப்தா புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.


Thursday, December 10, 2009

ஆலுமேத்தி(உருளைகிழங்கு வெந்தையக்கீரைக் கூட்டு), வெந்தயக்கீரை சப்பாத்தி





இடையறாத குடும்ப வேலைகளுக்கு மத்தியில் புதிய பதிவிட நேரம் கிடைக்கவில்லை. என் 18 மாத மகள் அகல்யாவிற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.

நான் வடஇந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கிறேன். இங்கு எல்லா உணவு வகைகளும் வித்தியசமானதாகவும் சுவையானதகவும் இருக்கும். 

வடஇந்திய உணவில் வெந்தயக்கீரைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. வெந்தயக்கீரையை சுவையாகவும்கசப்புத்தன்மை இல்லாமலும்குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவும் செய்யப்படும் ஆலுமேத்தி(உருளைகிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு) மற்றும் வெந்தயக்கீரை சப்பாத்தி எப்படி செய்வதென்று பாப்போம்.

ஆலுமேத்தி(உருளைக்கிழங்கு வெந்தயக்கீரைக் கூட்டு)

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 (பொடியாக நறுக்கியது)
வெந்தயக்கீரை -  ½ கட்டு 
வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
தக்காளி - 1 (சிறிதாக நறுக்கியது)
இஞ்சி - அங்குலம் 
பூண்டு - பல் 
மஞ்சள்பொடி - ¼ தேக்கரண்டி 
மிளகாய்ப்பொடி - தேக்கரண்டி
மல்லிப்பொடி - தேக்கரண்டி
சீரகம்- ½ தேக்கரண்டி
உப்பு ,எண்ணெய் - தேவைக்கேற்ப 


செய்முறை:
  • வானலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சீரகம் போடடு தாளிக்கவும். 
  • பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் உருளைகிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.
  • பிறகு தட்டிய இஞ்சிபூண்டு,  மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி மற்றும் உப்பைப் போட்டு நன்றாக வதக்கவும். 
  • பிறகு நன்றாக கழுவிப் பிழிந்த வெந்தையக்கீறையைச் சேர்த்துக் கிளறவும். 
  • கடைசியாக தக்காளியைப்  போட்டு கிளறவும்.
  • பிறகு சிறிது தண்ணீர் தெளித்து வாணலியை மூடி வைக்கவும்.
  • தண்ணீர் வற்றி உருளைக்கிழங்கு வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். 
அருமையான ஆலுமேத்தி தயார். இதை சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். 






வெந்தையக்கீரை சப்பாத்தி (மேத்தி ரொட்டி)



தேவையான பொருட்கள்:

வெந்தயக்கீரை -  ½ கட்டு 
கோதுமை மாவு - 2 கப் 
மிளகாய்ப்பொடி - ¼ தேக்கரண்டி 
மாங்காய்ப் பொடி (அம்ச்சூர் பொடி) - ¼ தேக்கரண்டி 
எண்ணெய் - தேக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப 


செய்முறை:

  • முதலில் வெந்தையக்கீரையை நன்றாக அலசித் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்து கொள்ளவும்.
  • கோதுமை மாவுடன் உப்பு, மிளகாய்ப்பொடிமாங்காய்ப் பொடி (அம்ச்சூர் பொடி), 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும்  வெந்தையக்கீரையையைச் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ளவும்.
  • பிறகு சிரிது சிரிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திமாவு போல பிசைந்து கொள்ளவும்.
  • பிறகு சப்பாத்திகளாக இட்டு சுட்டெடுக்கவும்.
சுவையான மேத்திரொட்டி ரெடி.




Tuesday, December 1, 2009

விருதுநகர் சிக்கன் ரோஸ்ட்





இந்த விருதுநகர் கோழி ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் எளிதானது. இதன் சுவை ரொம்ப அலாதியானது. இதை செய்து கொடுத்தால் என் கணவர் விடுமுறை நாட்களில் வேறு எங்கும் செல்லமாட்டார் வீடே கதியென்று கிடப்பார். 


தேவையான பொருட்கள்: 
கோழிக்கறி- 1 கிலோ
சிறிய வெங்காயம்- ¼ கிலோ
தக்காளி    -   ¼ கிலோ
பூண்டு     -  25 கிராம்
இஞ்சி     -  25 கிராம்
மிளகாய்த்தூள் 2 ஸ்பூன்
சோம்பு, சீரகம் 1 ஸ்பூன் (பொடித்தது)
தனியாத்தூள்  - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள்   - ¼ ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் 25 கிராம்
மிளகுத்தூள்   - ¼ ஸ்பூன்
புதினா - சிறிதளவு (தேவைப்பட்டால்) 


எப்படிச் செய்வது?
  1. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஜாதிக்காய் போட்டுத் தாளிக்கவும்.
  2. பிறகு சிறிய வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி இவை அனைத்தையும் வாணலியில் போட்டு சிவந்த நிறம் வரும் வரை கிளறவும்.
  3. பிறகு மிளகாய்த்துள், தனியாத்துள், மஞ்சள்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் அனைத்தையும் அதில் போடவும்.
  4. இனி கோழிக் கறியை அதில் போட்டுக் கிளறவும். உப்பு தேவையான அளவிற்குச் சோத்துக் கொள்ளவும்.
  5. தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றி வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன், ¼ ஸ்பூன் மிளகுத்தூள் சிறிது புதினா இலைகள் சேர்த்து இறக்கினால் அருமையான சிக்கன் ரோஸ்ட் ரெடி. 






Friday, November 27, 2009

பயனுள்ள மைக்ரோவேவ் டிப்ஸ்




  • இரண்டு பெரிய எலுமிச்சம் பழம் அளவு புளியை, ¼ கப் சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். புளியை வடிகட்டியில் வடிகட்டி, அதை மைக்ரோ- ஹையில் மூடாமல் 7 அல்லது 9 நிமிடங்கள் வைக்கவும்.  ஒருமுறை கலந்து விடவும். புளி பேஸ்ட் ரெடி. நீண்டநாட்களுக்கு ப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
  •  ப்ரிஜ்ஜில் இருக்கும் இறுகிப்போன வெண்ணெய்யை வெளியே எடுத்தால் அது எப்பொழுது அறையின் வெப்ப நிலைக்கு வருவது? அதை எப்பொழுது காய்ச்சுவது? வெண்ணெய்யை ஓவனில் டீப்ராஸ்டு மோடில் 20 செகண்டுகள் வையுங்கள். வெண்ணெய் மெத்தென்று இருக்கும்.
  • பூண்டையும், சின்ன வெங்காயத்தையும் ஒரு தட்டு அல்லது பேப்பரில் பரத்தி மைக்ரோ- ஹையில் 20- 30 செகண்டுகள் வைத்தால், அவற்றின் முதுகுத் தோலை ஈசியாய் உரித்து விட முடியும்.
  • ப்ரிஜ்ஜில் வைத்த எலுமிச்சம் பழத்தைப் பிழிய, மைக்ரோ- ஹையில் 30 செகண்டுகள் வைத்து எடுத்தால் பிழி பிழி”  என்று பிழியலாம்.  நிறைய சாறு வழியும்.
  • தண்ணீரில் தக்காளியைப் போட்டு மூடி, மைக்ரோ- ஹையில் 3 நிமிடங்கள் வைத்து எடுங்களேன். தக்காளியின் அரக்குப் பாவாடையை அழகாக அவிழ்த்து விடலாம்!

Thursday, November 26, 2009

சைனீஷ் நூடுல்ஸ்



கடைகளில் கிடைக்கும் மசாலா சேர்ந்த நூடுல்ஸ்களில் வரும் மசாலாப் பொடிகளில் அஜினோ மோட்டோ கலக்கப்பட்டுள்ளது. அது உடலுக்கு நல்லதல்ல.  
மசாலா சேர்க்காத நூடுல்ஸை சுவையாகச் வீட்டிலேயே செய்வது எப்படியென்று பார்போம்.


தேவையானவை:
நூடுல்ஸ் – 1 பாக்கெட் 
சோயா சாஸ் – 2 டீஸ்பூன் 
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் 
வினிகர் - ½ டீஸ்பூன் 
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் 
குடை மிளகாய் – 1 
கேரட் - 1 
முட்டைக்கோஸ் – ¼ 
பச்சை பட்டாணி – 50 கிராம் 
வெண்ணெய் - 2 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்


செய்முறை:
தளதளவென கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி ,ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து தனியாக எடுத்து வையுங்கள். 


பொடியாக நறுக்கிய பச்சை மிள்காய், பொடியாக சீவப்பட்ட முட்டைக்கோஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி அகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும். பிறகு தனியாக எடுத்து வைத்த நூடுல்ஸையும் போட்டு கிளறினால் சைனீஷ் நூடுல்ஸ் ரெடி.

குறிப்பு: முட்டை, காய்கள், பனீர், காளான் என இனைப்புகளை மற்றும் மாற்றி விதவிதமாக செய்யலாம்.

Tuesday, November 24, 2009

சத்தான ஸ்டஃப்டு புரோட்டா


புரோட்டா என்றாலே மைதாவில் செய்த உணவு உடலுக்கு ஆரோக்கியம் இல்லாதது என்று பலர் கருதுவதுண்டு. அனால் அதே புரோட்டவை காய்கறிகள் ஸ்டஃப் செய்து ஆரோக்கியமானதாக மாற்றி விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி இது.


செய்முறை 


தேவையானவை:


மைதா மாவு  -  2 கப், 
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைகேற்ப


உள்ளே ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு: 


மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - ஒரு கப்,
நீளவாக்கில் நறுக்கிய கேரட் - அரை கப்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4,
பூண்டு (விருப்பப்பட்டால்) - 4 பல்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன், 
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - 2 அல்லது   3 டேபிள்ஸ்பூன்,
முளைப்பயறு - ஒரு கைப்பிடி.


செய்முறை: எண்ணெய் காயவைத்து, பூரணத்துக்கு கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேருங்கள். 3 நிமிடம் வதக்கி இறக்குங்கள். இது தான் புரோட்டாவுக்குள் ஸ்டஃப் செய்யும் பூரணம்.


இனி மைதாவை உப்பு, சிறிது எண்ணேய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள்.  பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி, அதன் நடுவில் பூரணக் கலவையை நிரப்புங்கள்.  பக்கவாட்டில் மடித்து, சதுர வடிவமாக்கி கொள்ளுங்கள். தோசைகல்லில் போட்டு, எண்ணேய் ஊற்றி சுட்டெடுங்கள்.  


முயற்சி செய்து பாருங்கள்.


டிப்ஸ்: ஸ்டஃப்டு புரோட்டா நடுவில் கனமாகவும், ஓரத்தில் மெல்லிதாகவும் இட்டு நடுவில் ஃபில்லிங்கை வைத்து தேய்த்தால் ஃபில்லிங் நன்கு பரவி இருக்கும். 






Monday, November 23, 2009

தாலாட்டு பாட்டு




இந்த காலத்து இளம் தாய்மார்கள் அழும் குழந்தையை தேற்றுவதற்கோ அல்லது குழந்தையை தூங்க வைப்பதற்கோ தாலாட்டு பாடத் தெரியாமல் கஷ்டப்படுவதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்காகவே நான் என் குழந்தைக்குப் பாடிய தாலாட்டுப் பாடல் இதோ.

"ஆராரோ ஆரிராரோ கண்ணே
என் கண்ணே நீ கண்ணுறங்கு
என் பொன்னே நீ கண்ணுறங்கு
யாரஅடிச்சா நீ அழுற [ஆராரோ ஆரிரரோ ......]

மாமி அடிச்சாளோ மல்லிகைப்பூ செண்டாலே
மாமன் அடிச்சாரோ மரிக்கொழுந்து செண்டாலே
பாட்டி அடிச்சாரோ பஞ்சுடைக்கும் கோலாலே
பாட்டன் அடிச்சாரோ பசுவேட்டும் கோலாலே
அண்ணன் அடிச்சாரோ அத்திப்பூ கையாலே

அக்கா அடிச்சாரோ ஆவாரம்பூ கையாலே
அடிச்சார சொல்லியழு அக்கினைகள் பண்ணுகிறேன்
அடிக்கு அடியே வாங்கிடுவேன்
அத்தனையும் தாங்கிடுவேன் [ஆராரோ ஆரிரரோ ......] "

Related Posts with Thumbnails